Thursday 22 February 2018

முகநூலில் பதிவிட்ட கவிதை - ஒரு இந்து என்பதாலேயே

ஒரு இந்து என்பதாலேயே
நீங்கள் ஒரு இந்து என்பதாலேயே,
பரமஹம்சரின் ஆன்மீகத்தை,
விவேகானந்தரின் விவேகத்தை,
புத்தனின் கருணைமுகத்தினை
சமணத்தின் தன்னலமறுப்பினை
கிறித்துவின் இரக்கத்தை,
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை
அனைத்துமிணைந்த இந்திய மெய்யறிவுச் சாரத்தை,
மகாத்மாவின் மனிதநேய, அறவேட்கையினை,
தன்னார்வச் சேவையின் உன்னதத்தை,
இராமராஜ்யத்தின் பரிபாலன மாண்பினை,
உலகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது.
அதனாலேயே, இந்தியப் பரிந்துரையாக
யோகாவை ஏற்றுச் சிறப்பித்தது, ஐநா.
நீங்களோ, இப்போதும்,
ரம்ஜான், தீபாவளி, எரிமேடை, புதைமேடு என
வெறுப்பினை விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பதவியின் மாண்பினை, இயக்கங்கள்
கற்றுக்கொடுப்பதில்லை போலும்!
-- ச.ஆறுமுகம்.  
23.02. 2017 இல் முகநூலில் பதிவிடப்பட்டது.

No comments:

Post a Comment