Sunday 31 January 2016

இந்தோனேசியன் சிறுகதை - சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven) -ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy)

சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven)

இந்தோனேசியன் : ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy)
ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn)
தமிழில் ச. ஆறுமுகம்

Image result for abidah el khalieqy
Image result for abidah el khalieqy
ஆபிதா எல் காலிக்கி, கிழக்கு ஜாவாவில் ஜோம்பங் நகரில் 1965ல் பிறந்தவர். இளமையிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி 1997 ல் வெளிவந்தது. இந்தோனேசிய மொழியில் இதுவரை ஒன்பது நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். அவரது Perempuan Berkalung Sorban  என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. Genijora  என்ற நாவல் 2003ல் ஜாகர்த்தா கலைக் கவுன்சில் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இந்தோனேசிய சமூகத்தில் தற்போதும் பலதார மணம், குடும்ப வன்முறை எனப் பலவகையிலும் ஒடுக்கப்படுவதாக, ஆபிதா கருதும் பெண்களின் குரலாகவே, அவரது படைப்புகள் உள்ளன.



*******
என் அம்மா இறந்தபோது, அவளது முகம் மாறியது. நான் தான் அதை முதலில் கவனித்தேன். உறவினர்களும் நண்பர்களும் மரியாதை செலுத்துவதற்காக வந்தபோது, அவர்கள் கண்களில் நான் சந்தேகத்தைக் கண்டேன்; இறந்தது, என் அம்மாதானென யாராலும் நம்பமுடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்காத என் உடன்பிறந்த சகோதரன் கூட, அவள் பிணத்தைப் பார்த்ததும், இறந்தது, அம்மா அல்ல, அவளது கடைசித் தங்கையான எங்கள் சித்தி என்று அறிவித்தான். அம்மாவுக்குச் சிகிச்சையளித்துக் கவனித்துவந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்; அவரவர் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.
நான், அந்த அறையின் தொலைவான ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இறந்த அம்மாவைப் பார்க்கவந்தவர்களின் முகங்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்களில் யார், யார் அம்மாவை உண்மையில் நேசித்தார்கள், யார், யார் நேசிக்கவில்லையென்பதை, உடனடியான அவர்களது முகக்குறிப்பு, எனக்கு எளிதில் காட்டிக்கொடுத்தது. நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவைப் பார்த்த உடனேயே தனது உதடுகளைக் கடித்துக்கொண்ட ஒரே ஆள் – வேறுயாருமில்லை, என் அப்பாவேதான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
தொலைபேசி ஒன்று எனக்குள் கிணுகிணுத்தது. ‘’அவர் பொறாமைப்படுகிறார், கடுமையான அளவுக்கு, உச்ச கட்டத்திலான பொறாமை.’’ என்று தொடர்பு துண்டித்துக்கொண்ட ஒரு குரல் சொன்னது. முகத்தில் ஒரு தேவதையின் புன்னகையைத் தாங்கியிருந்த அம்மா மிகமிக இளமையாக, இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நாளில் போல, அவளது இளமைத் தோற்றத்திற்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றினாள்.
‘’இதுதான் என் உண்மையான முகம்,’’ என மென்மையாக இரகசியம் போல் என் காதில் பேசிய அம்மா, ‘’மணநாள் இரவில் புதுமணப்பெண் போல்.’’ என்றாள். அவள் உறுதியாகத் தீர்மானத்தோடு சொன்னாள். ‘’அமைதியான மசூதியைப் பார்த்திருந்த எங்கள் வீட்டில், ஒரு மலைப்பூட்டும் விருந்துடன் தொடங்கி, முடிவில் உடல் முழுவதும் ரணமும் வேதனைமிக்க நினைவுகளுமாகிப்போன ஒரு இரவு.’’
வலியும் வேதனையும் அவளது வாழ்க்கையில் நிரந்தரமாகிப்போனதை நினைவுபடுத்திக்கொண்டு, அவள், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தாள் : ‘’என் முகத்திலிருக்கும் இந்தத் தோற்றம் தான், அவருக்குள் மாளாத பெரும் பொறாமையைக் கிளப்பி, என்னைத் திட்டவும்,  உதைக்கவும்  அந்தத் திருமண இரவில் வன்முறையாக, வலிந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்தது – இதற்கெல்லாம் காரணம், என் வீட்டின் முன்னாலிருந்த மசூதியில் நிகழ்ந்த நடு இரவுத் தொழுகையின் போது நானும் தஹாஜுத் பிரார்த்தனை செய்தேன் என்பது மட்டுமே தான்.’’
என் உணர்வுகள் கட்டுப்பாடின்றி மேலெழும்போதெல்லாம் நான் உணர்கின்ற, மேடை நடுக்கம் போன்ற ஒன்றினை உணர்ந்து, என் உடல் தானாகவே நடுங்கியதைக் கண்டேன். உடல் முழுதும் திடீரென வெப்பம் அதிகமாகி, இரத்த நாளங்களில் ஒரு வேதனையின் ஓட்டத்தை, மார்புக்கூட்டுக்குள்    தொடர்ந்த ஒரு உலக்கை இடிப்பினைத் தாங்க முடியாமல் அம்மாவுக்கான என் முதல் கண்ணீரைச் சிந்தினேன்.
குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில், நான் மட்டுமே பெண். அதனால்தானோ, என்னவோ, நாங்கள் ஐந்து பேருமே, பெரும்பணக்காரரான ஹாஜி கமீலின் நான்காவது மனைவியின் ஒரே கருப்பையிலிருந்து உதித்திருந்தாலும், அம்மாவுடன் ஒரு ஒத்த உணர்வினை, நான் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.
ஊர்மக்கள் என் அப்பாவைப் பெரும் சொத்துக்காரர் என்றுதான் அழைத்தார்கள். நாங்கள், அவரது குழந்தைகள், அவரது செல்வத்தில் மூழ்கிக் குளித்தோம். ஒரு மனிதனை, அவன் மனைவி  மற்றும் குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காத சமூக உணர்வில் மூழ்கடிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் எல்லோருமே அதிகாரம் பொருந்திய, வலிமையும் ஆண்மையழகும் மிக்கவராகப் புகழ்பெற்ற எங்கள் அப்பாவின் உடைமைகளின் ஒரு பகுதியாகவே எல்லோராலும் கருதப்பட்டோம்.
நான் அப்பாவின் அருகில் சென்றேன். ‘’ வித்தியாசமாக, எதையாவது பார்த்தீர்களா, அப்பா? புருவத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?’’
‘’ஆமாம், பார்த்தேன், உன் அம்மாவின் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அவளது சுகக்கேடுதான்  உடல் தோற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.’’
அம்மாவுக்கு மூளையில் இரத்தக் கசிவு என்று மருத்துவர் சொன்னார். உறுதியாக அதுதானா, அப்பா? நிறையப் பேர் இரத்தக்கசிவினால் சாகிறார்கள், ஆனால், அதனாலேயே நோயாளியின் தோற்றத் தன்மைகள் மாறுவதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.’’
‘’யாருக்குத் தெரியும்? உன் அம்மா வித்தியாசமானவள் … சாவில் கூட இப்படியொரு சிரிப்பு, சிரிக்கிறாள்.’’
‘’எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அம்மாவின் மரணம் பொருத்தமானதாக, துயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மரணம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறதென்றுகூடச் சொல்லலாம். அவளது சிரிப்பைப் பாருங்கள். இப்படி ஒரு அழகான சிரிப்பினை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? திரைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.’’
‘’என்ன பேசுகிறாய்? அதுவுமில்லால் உனக்கு என்னதான் தெரியும்? மூக்கு வடிக்கிற குழந்தை, நீ!’’
‘’நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவுக்கு இது ஒரு நல்ல சாவு – எல்லோரும் சொல்வார்களே ஹூஸ்னுல் காத்திமா, அது.’’
‘’உஷ்! போய் ஏதாவது வேலையைப் பாரு; சித்திக்கு உதவி செய்! போ, போ!’’
‘’நான் அம்மா கூடத்தான் இருக்கப் போகிறேன். அவளோடு கூட இருக்கப்போகிற கடைசி வாய்ப்பு, இது. அவளுக்காக, நான் பிரார்த்தனை செய்ய வேண்டும், அப்பா.’’
நோயர் ஊர்தி வந்த போது, எல்லோருமே இன்னும் பரபரப்பானோம்; ஆனால், நான், அம்மாவிடமிருந்து யாரும், என்னைப் பிரிக்க, என் அப்பாவாக இருந்தாலும் கூட,  அனுமதிக்கப்போவதில்லை.
‘’நீ ஒரு பெண்; உனக்குப் போதிய பலம் கிடையாது; ஆம்புலன்சில் நான் கூடப் போகிறேன்.’’ என்றார், என் அண்ணன்.
‘’ நல்ல திடமாகத்தான் இருக்கிறேன்,’’ நான் வலியுறுத்தினேன். ‘’அம்மா மருத்துவ மனையிலிருந்த காலமெல்லாம், நான் தான் அவள் பக்கத்திலேயே காத்துக் கிடந்தேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அம்மாவின் நெருக்கத்திலிருப்பதுதான் எனக்கு நிம்மதி.’’
‘’உன் ஒப்பாரியையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.’’
அழத்தேவையில்லாத காரணங்களுக்கு, ஆண்களும் கூடத்தான் அழுகிறார்கள். அம்மாவின் இறப்புக்காக நான் அழ மாட்டேன். அவள் அவரின் மாளிகைக்குப் போய்ச்சேரும்வரையில் அவளுடனேயே இருந்து, அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருப்பேன்.
‘’யாருடைய மாளிகை?’’ வாயை மூடிக்கொண்டிருந்த என் அண்ணன் கேட்டார்.
‘’நல்லது, நிச்சயமாக, அது, நீங்கள் நினைக்கும் இடமல்ல!’’
‘’நீயும் உன் முட்டாள்தனமும்!’’ என முணுமுணுத்தவாறே அகன்று சென்றார்.
‘’என் முட்டாள்தனம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும், அதைவிடவும் முட்டாள்தனமானவன் நீ’’ சிரிப்பினை அடக்கிக்கொண்டு, எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.
முடிவில், நானும் எனது சித்தியும் தான், நோயர் ஊர்தியில் அம்மாவுடன் சென்றோம். அப்போது இரவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலை எளிதாக, வசதியாக இருந்தது; யோக்யகார்ட்டாவிலிருந்து ஜோம்பங் சென்று சேர ஐந்து மணி நேரமே ஆனது. பயணத்தின் போது சித்தி, இருக்கையிலேயே தூங்கிவிட்டாள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில், நான் பிரார்த்தனை செய்தேன்.
ஒரு கட்டத்தில், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, நடு இரவு பன்னிரண்டு தாண்டி அதிகாலை முப்பது நிமிடமாகியிருந்தது.
‘’ஆமாம்! இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அதிகாலை பன்னிரண்டு முப்பதுக்குத்(00.30)தான், நான் வீட்டிலிருந்தும் வெளியே வந்தேன்,’’ என்றாள், அம்மா. ‘’அன்று இரவில் மசூதியின் வாசலை மிதிக்கும் தீராத பேராவலினை உணர்ந்தேன். என் இதயம் முழுவதுமாக ரோஜாக்கள் நிறைந்து, என் முகம் எதுவும் அறியாத்தன்மையில் ஒளிவீசியது. அவர் மிஹ்ரபில், நான் மெக்காவின் திசை நோக்கித் தொழுகின்ற இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல, விரைந்து செல்ல முயற்சித்தேன். என்னுடைய தாமதத்தை நினைத்து, என்னையே நொந்துகொண்டு, நான் மசூதியின் மாடிப்படிகளில் ஏறினேன். தொழுகையின் போது, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையில் தலையால் அடிபணிந்து வணங்கினேன். ஒன்றின் பின் ஒன்றாக, ஒவ்வொரு முறையும் என் நெற்றி அவரது பார்வையில் தரையைத் தொட்டு வணங்கியது. அப்படியாக எவ்வளவு நேரம் என்னை அர்ப்பணித்திருந்தேனென்று என்னால் சொல்ல இயலாது, ஆனால், அவரோடு செலவழிக்கின்ற நேரத்தை ஒருவர் எத்தனை மணி நேரமெனக் கணக்கிட்டு  எண்ணுவதில்லை. ஆனால், நான், அதன் பின்னர், எனது புதிய வீட்டிற்குத் திரும்பி, முன்வாசலில் என் காலை வைத்தேனோ இல்லையோ, அடிவயிற்றில் விழுந்த உதையில் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுபோயிற்று – அதுவே முதல் அடி, அதைத் தொடர்ந்து, தீவிரமாக வளர்ந்த வெறுப்பில் கனத்த எத்தனையோ அடிகள்.’’
என் முகம் தொங்கிப்போயிற்று. அம்மாவின் தலைவிதிப் புத்தகத்திலுள்ள அனைத்துப் புனிதங்களையும் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தேன், ஆனால், என் கண்கள் பனித்து என் அம்மாவின் இரகசியத் தொகுப்புகளின் முழுமை அனைத்துக்குள்ளும் என் பார்வையைச் செலுத்தும் நிலையில் நான் இல்லையென்பதும் தெளிவாகவே புரிந்தது. அம்மா, மிக நெருக்கமானவள், ஆனால், அதே நேரத்தில் மிகத் தொலைவானவளுமாக…….. அவளுடைய இரகசியக் காயத்தை, அதன் வலியை, எல்லோருக்கும் நன்கு தெரிந்த அவளது பொறுமையாலும், எக்கணமும் பொழிகிற வற்றாத அன்பாலும், எவ்வளவு சுத்தமாக மறைத்திருக்கிறாள்!
‘’ உதைப்பதற்கு வசதியாகக் காலை மாற்றிக்கொண்ட உன் அப்பா, ‘’ஏய், நீ மட்டும்தான் உண்மையான முஸ்லிமென்று நினைக்கிறாயா! நீ ஒருத்திதான் விசுவாசமுள்ள ஒரே ஆளென்று நினைக்கிறாயா! நல்லது, கேட்டுக்கொள்! இன்றையிலிருந்து, நான் உனது கணவன். வேறு எவரையும் விட, எனக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடைய உத்திரவுகளுக்குத் தான் கீழ்ப்படியவேண்டும், அதற்கும் மேலாக, வேறு எவருக்குமல்ல. உன்னுடைய விசுவாசம், நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அதுவும் எனக்கு மட்டுமேதான். புரிந்ததா?’’
‘’நான் மசூதிக்குப் புறப்படும்போது, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தீர்கள்….’’
‘’வாயை மூடு! ஒரு பொம்பளை, உன்னோடு நான் பேசத் தயாரில்லை!’’
‘’அதனால் நானும் வாயை மூடிக்கொண்டேன்,’’ அம்மா மிக எளிதாகச் சொன்னாள். ‘’அன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு என் வாயை மூடிக்கொண்டேன். பேசுகிற உரிமை உன் அப்பாவுக்கு மட்டும் தான் இருந்தது. மரணக் கூர்முனைக்கத்தியின் கீழான அச்சுறுத்தலில் உறைந்து, இறுக்கமாகி, மவுனமாகிப்போன ஒரு உலகத்தில், வாழ்க்கையின் கனவுகள் கண்ணெதிரே கடந்து செல்வதை, வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊமையாக, நான் இருந்தேன். நான், உன் அப்பாவின் பலிப்பொருள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும், ஒவ்வொரு நொடிக்குமான பொருள், ஒரு முன்மாதிரிப் பலியாக எப்படி இருக்கவேண்டுமென்பதான அவரது வார்த்தைகளைக் கேட்டு, மனப்பாடம் செய்வது - இணக்கமான ஒரு சிரித்த முகத்துடன் பலிபீடத்துக்குச் செல்வதுதான். இப்போது, நான் அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டேன். நான், உன் அப்பாவுடைய தியாகப் பலி; நான் அவருக்காகவே இறந்ததாக எல்லோரும் நினைக்கிறார்கள்.’’
‘’நான், திடீரென்று இப்படிச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், இதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூதியிலிருந்து திரும்பிவரும்போது – அவர் என்னை அடிக்கத் தொடங்குவதற்கு முன், என் முகத்திலிருந்ததும் ஒன்றுதானென உணர்ந்திருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளிலும், அவர் அந்தச் சிரிப்பை, நான் இப்போது என் இதழ்களில் அணிந்திருக்கிறேனே, இதே சிரிப்பினைத்தான் தேடினார்; ஒவ்வொரு இரவிலும், பகலிலும், அவர் அதைத் தேடித்தேடிப் பெரும் ஆசைகொண்டு, அதையே கனவாக்கிக்கொண்டார். ஆனால், அவர் கண்டதெல்லாம் வெறும் கானல்தான்; என் இதழ்கள் தாம் உறைந்த இரத்தத்தால் – அவரது முரட்டு விரல்கள் என் வாயைப்பற்றிக் கீறியதில் கசிந்த இரத்தம் – மூடிக்கிடந்தனவே.’’
அம்மா, மீண்டும் பேசத் தொடங்கும் முன், ஆழ்ந்து ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டார். ‘’இப்போது நேரம் என்ன, தெரியுமா? ஆம். இப்போது காலை பன்னிரண்டு முப்பது. புதுமணப் பெண்ணாக            அதைத் தொடர்ந்த முதல் மாதம் முழுவதும், எந்த அளவுக்கு முயன்றாலும், அடக்கமுடியாத, அவரது முன்னிலையில் அவரை அடிபணிந்து, வணங்கித் தொழுகை செய்கின்ற அந்தத் தணியாத பேராவலை உணர்ந்தேன். என்னுடைய ஆவல், எல்லைகள் அனைத்தையும் கடந்தது; என் பிரார்த்தனைகளுக்கும், என்னுடைய அடிபணிந்து, வணங்கல்களுக்குமான அவரது  புன்னகையே   அந்தத் தீராத பேராவலைப் பெருகச்செய்தது. எங்கள் புதுமண அறையின் ஒரு மூலையிலேயே, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையைத் தலையால் தொட்டு வணங்கி, நம்மைப் படைத்தவருடன் ஒன்றும் தீவிர எண்ணத்தின் இராகத்தில் என் மாலையின் மணிகளை உருட்டினேன்.
‘’ஒரு வேளை, நான், என்னை அறியாமலேயே சத்தமாகப் பெருமூச்சிட்டிருக்கலாம், ஆனால், அந்தப் பெருமூச்சு உன் அப்பாவின் செவிகளைத் துளைத்ததோடு, அவரது நரம்புகள், இதயம், மனம்……. எல்லாவற்றுக்குள்ளும் கொழுந்து விட்டெரிந்த பொறாமையின் தீநாக்குகளால் என் செவிகள் கருகிப்போயின. அப்புறம், அந்த அறையில் அத்தனை குரூரமாக, உறுதியாக, கனமாகத் தொங்கிக்கொண்டிருந்த முதலைத் தோல் கச்சினை நான் எப்படி மறக்க முடியும்! அவர் கச்சினை எடுத்து, உயர்த்தி என் முதுகில் பத்துப் பத்தாக இல்லை, நூற்றுக்கணக்கான முறைகள் விளாசினார். என் அமைதி அவருக்குள் இன்னும் முரட்டுத்தனமாக, பொறாமையின் தீ நாக்குகளை எழுப்பின. நான் மயங்கி விழுந்தேன்; காலைத் தொழுகைக்கான அழைப்பு என் காதுகளில் விழும்வரையில் என் நினைவு திரும்பவேயில்லை.’’
சிறிது நேரம் அம்மா எதுவுமே பேசவில்லை. அவளது கண்கள் தொலைதூரத்து வானத்தில் பதிந்திருக்க, சுவர்க்கத்தின் தேவதைக்கே பொருத்தமான அந்தச் சிரிப்பு அவள் இதழ்களில் மலர்ந்து, முகம் முழுவதும் பரந்தது.
‘’எனக்குத் தெரியும், அப்புறம் என்ன நடந்ததெனத் தெரிந்துகொள்ள விரும்புவாய்,’’ என்ற அம்மா, ‘’ எனக்குப் பைத்தியம் என்று உண்மையிலேயே உன் அப்பா நினைத்திருக்கலாம். ஏன் அப்படி? முடிவில்லாத வலியும் வேதனையும் எனக்குள் எழுந்தாலும், புதுமையான விஷயம் என்னவென்றால், அவர் மீதான என் தணியாப் பேராவல் இன்னும் தீவிரமானதுதான். அது என்னால், பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு நாடித் துடிப்புக்கும், அவரது முகம் என்னை நெருங்கிவந்துகொண்டேயிருந்தது.
அடிக்கடி நினைவுகள் தடுமாறி நான், எளிதில் குழப்பத்துக்காளானேன்.  சமைத்துக்கொண்டிருக்கும் போது, நான் பொரிக்கும் அத்தனை மீனும் வாணலியில் கரியாகப் போகிற அளவுக்குக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது, இரவில் ஏதோ கதவு தட்டிய சத்தம் கேட்டது போல, வீட்டின் முன்கதவைத் திறந்து பார்ப்பேன்; ஆனால் அங்கு, எதுவுமே இருக்காது. என் நடத்தையும் செயல்பாடுகளும், நான் சபிக்கப்பட்டவளென உன் அப்பாவை நம்பச்செய்துவிட்டன. ஆவிகள் தாம் என்னைப் பீடித்திருப்பதாக அவர் நினைத்தார்.’’
அம்மாவின் கையைத் தடவித் தட்டிக்கொடுக்கவேண்டுமென நான் நினைத்தேன்; ஆனால், தூக்கக்கலக்கம் என்னை வீழ்த்திவிட்டது.
‘’இப்படியாக இருக்க, அன்றைக்கு உன் அப்பா ஏதோ வியாபார விஷயம் அல்லது வேறு ஏதோ ஒன்றுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது காலை ஒன்பது மணி இருக்கும். அதனால், தொழுகைக்கான சுத்தப்படுத்தல் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவருடன் ஒன்றுவதான என் ஆவலை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.  என் தொழுகை மிகத் தீவிர ஈடுபாடாகி, நான் ஆழ்ந்த பணிவுடன் அடிபணிந்து, தலைவணங்கியிருந்ததில், உன் அப்பாவின் மகிழுந்து வந்த சப்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் உண்மையிலேயே அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முந்தைய எனது, கடைசித் தலைவணங்கல் அதுவாகவே அமைந்துவிட்டது. என் தலையில் விழுந்த அடியில் என்னுடைய திடமற்ற மண்டையோடு பளபளக்கும் கடினப் பீங்கான் தரை ஓடுகளில் மிகுந்த வேகமாக மோதியது; அது திடீரென ஒரு மின்னல் வெடித்தது போல அவ்வளவு கடினமாக இருந்தது; வெறிகொண்ட பார்வையைப் பிரதிபலித்த கண்களுடன் என் தலையைப் பின்னுக்கு இழுத்து என் குரல்வளையைப் பிடித்து இறுக்கிய உன் அப்பாவின் கைகள், நான் மூச்சற்றுத் தரையில் விழும்வரையில் விடவேயில்லை.’’
‘’அப்புறம் என்ன நடந்தது, அம்மா?’’
‘’திடீரென்று, எல்லாமே இருட்டாகிவிட்டது. எங்கும் ஒரே மைக்கறுப்பு! உலகம் முழுவதுமே அமைதியாகிவிட்டது. அதன் பின்னர், வெகுதூரத்தில் கண்ணைப்பறிக்கும் ஒரு  ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் தோன்றி, நிலைத்த ஒளிப்பாதை ஒன்றை வீசியது. அது – குழந்தையின் கனவில் தோன்றுவதைப் போல - என்னை வரவேற்க வந்துகொண்டிருந்த, ஏழு நிலவுகளின் பிரகாசத்தைக் கொண்ட ஒரு ஒளித்தேர். மந்திரவாதியின் அற்புதம் போன்ற, ஒரு கோடி கவிஞர்களால் கூட விவரிக்கமுடியாத பரவசத்தில்  நான் புன்னகைத்தேன். அவரது அரியணைக்கு என்னை இட்டுச் சென்ற தேர் பயணித்த தூரம் அநேகமாக மிகமிகக் குறைந்ததாகத்தான்  – எனது திருமண அறையிலிருந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு முன்புள்ள மசூதிக்குக் கடந்து சென்றேனே அதைவிட அதிக தூரமில்லாமல்தான் – தோன்றியது. அங்குதான், நான் பரிபூரண அன்பினைக் கண்டேன்; அதுவே, என் இதழ்களின் புன்னகையிலும் தெரிகிறது.
‘’உன் அப்பா, அவர் மீது பொறாமை கொள்ளலாமா?’’ அம்மா நயமாகக் கேட்டாள்.
நூறு தேவதைகள் ஒன்றுசேர்ந்து இழுக்க, நோயர் ஊர்தி பறந்துகொண்டேயிருந்தது, நீர் கோர்த்த வானத்தின் கீழான மேகமூட்டத்தில், நான் என் கண்ணீரைக் கழுவ முயற்சித்தேன். பின்னர், அன்பின் ரோஜாக்கள் என் இதயத்தில் பெருமிதத்துடன் இதழ்விரித்தன. என் அம்மா, அன்பின் பெருங்கடல், சுவர்க்கத்தின் மிக அருகில் – உங்கள் ஆன்மாவின் காலடிக்குச் சற்றே கீழாகக் காணப்படுகிறாள். நல்வணக்கம், சென்று வா, அம்மா. அன்பான கடவுளே! உங்கள் நேசக்கரத்தால் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.     
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தோனேசியா மற்றும் மலேயாவில் பெண்களும் தொழுகைக்காக, மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருபது ஆண்டுகளாக முதலைத் தோல் கச்சினால் அடிவாங்கி, கடைசியில் கணவனின் கையாலேயே மரணமடையும் குடும்ப வன்முறையினைப் படித்து முடித்த நேரத்தில்,  முகமது மீரானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முஸ்தபாக்கண்ணு, மனைவி மரியத்தை அடிப்பதற்காகவே, உத்தரத்தில் எப்போதும் வைத்திருந்த அந்தப் பிரம்பு நினைவுக்கு வந்து தொலைந்தது.   நல்லவேளையாக, வறுமையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்த புதுமைப்பித்தனின் செல்லம்மாளும் பிரமநாயகம் பிள்ளையும், அவர்களைத் தொடர்ந்து ஆலீஸ் மன்றோவின் கிராண்ட்டும் (மலை மேல் வந்தது, கரடி) ஆறுதலுக்கு வந்தனர்
    

இந்தோனேசியன் : ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy)
ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn)
தமிழில் ச. ஆறுமுகம்
ஆபிதா எல் காலிக்கி, கிழக்கு ஜாவாவில் ஜோம்பங் நகரில் 1965ல் பிறந்தவர். இளமையிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி 1997 ல் வெளிவந்தது. இந்தோனேசிய மொழியில் இதுவரை ஒன்பது நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். அவரது Perempuan Berkalung Sorban  என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. Genijora  என்ற நாவல் 2003ல் ஜாகர்த்தா கலைக் கவுன்சில் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இந்தோனேசிய சமூகத்தில் தற்போதும் பலதார மணம், குடும்ப வன்முறை எனப் பலவகையிலும் ஒடுக்கப்படுவதாக, ஆபிதா கருதும் பெண்களின் குரலாகவே, அவரது படைப்புகள் உள்ளன.



*******
என் அம்மா இறந்தபோது, அவளது முகம் மாறியது. நான் தான் அதை முதலில் கவனித்தேன். உறவினர்களும் நண்பர்களும் மரியாதை செலுத்துவதற்காக வந்தபோது, அவர்கள் கண்களில் நான் சந்தேகத்தைக் கண்டேன்; இறந்தது, என் அம்மாதானென யாராலும் நம்பமுடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்காத என் உடன்பிறந்த சகோதரன் கூட, அவள் பிணத்தைப் பார்த்ததும், இறந்தது, அம்மா அல்ல, அவளது கடைசித் தங்கையான எங்கள் சித்தி என்று அறிவித்தான். அம்மாவுக்குச் சிகிச்சையளித்துக் கவனித்துவந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்; அவரவர் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.
நான், அந்த அறையின் தொலைவான ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இறந்த அம்மாவைப் பார்க்கவந்தவர்களின் முகங்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்களில் யார், யார் அம்மாவை உண்மையில் நேசித்தார்கள், யார், யார் நேசிக்கவில்லையென்பதை, உடனடியான அவர்களது முகக்குறிப்பு, எனக்கு எளிதில் காட்டிக்கொடுத்தது. நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவைப் பார்த்த உடனேயே தனது உதடுகளைக் கடித்துக்கொண்ட ஒரே ஆள் – வேறுயாருமில்லை, என் அப்பாவேதான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
தொலைபேசி ஒன்று எனக்குள் கிணுகிணுத்தது. ‘’அவர் பொறாமைப்படுகிறார், கடுமையான அளவுக்கு, உச்ச கட்டத்திலான பொறாமை.’’ என்று தொடர்பு துண்டித்துக்கொண்ட ஒரு குரல் சொன்னது. முகத்தில் ஒரு தேவதையின் புன்னகையைத் தாங்கியிருந்த அம்மா மிகமிக இளமையாக, இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நாளில் போல, அவளது இளமைத் தோற்றத்திற்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றினாள்.
‘’இதுதான் என் உண்மையான முகம்,’’ என மென்மையாக இரகசியம் போல் என் காதில் பேசிய அம்மா, ‘’மணநாள் இரவில் புதுமணப்பெண் போல்.’’ என்றாள். அவள் உறுதியாகத் தீர்மானத்தோடு சொன்னாள். ‘’அமைதியான மசூதியைப் பார்த்திருந்த எங்கள் வீட்டில், ஒரு மலைப்பூட்டும் விருந்துடன் தொடங்கி, முடிவில் உடல் முழுவதும் ரணமும் வேதனைமிக்க நினைவுகளுமாகிப்போன ஒரு இரவு.’’
வலியும் வேதனையும் அவளது வாழ்க்கையில் நிரந்தரமாகிப்போனதை நினைவுபடுத்திக்கொண்டு, அவள், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தாள் : ‘’என் முகத்திலிருக்கும் இந்தத் தோற்றம் தான், அவருக்குள் மாளாத பெரும் பொறாமையைக் கிளப்பி, என்னைத் திட்டவும்,  உதைக்கவும்  அந்தத் திருமண இரவில் வன்முறையாக, வலிந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்தது – இதற்கெல்லாம் காரணம், என் வீட்டின் முன்னாலிருந்த மசூதியில் நிகழ்ந்த நடு இரவுத் தொழுகையின் போது நானும் தஹாஜுத் பிரார்த்தனை செய்தேன் என்பது மட்டுமே தான்.’’
என் உணர்வுகள் கட்டுப்பாடின்றி மேலெழும்போதெல்லாம் நான் உணர்கின்ற, மேடை நடுக்கம் போன்ற ஒன்றினை உணர்ந்து, என் உடல் தானாகவே நடுங்கியதைக் கண்டேன். உடல் முழுதும் திடீரென வெப்பம் அதிகமாகி, இரத்த நாளங்களில் ஒரு வேதனையின் ஓட்டத்தை, மார்புக்கூட்டுக்குள்    தொடர்ந்த ஒரு உலக்கை இடிப்பினைத் தாங்க முடியாமல் அம்மாவுக்கான என் முதல் கண்ணீரைச் சிந்தினேன்.
குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில், நான் மட்டுமே பெண். அதனால்தானோ, என்னவோ, நாங்கள் ஐந்து பேருமே, பெரும்பணக்காரரான ஹாஜி கமீலின் நான்காவது மனைவியின் ஒரே கருப்பையிலிருந்து உதித்திருந்தாலும், அம்மாவுடன் ஒரு ஒத்த உணர்வினை, நான் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.
ஊர்மக்கள் என் அப்பாவைப் பெரும் சொத்துக்காரர் என்றுதான் அழைத்தார்கள். நாங்கள், அவரது குழந்தைகள், அவரது செல்வத்தில் மூழ்கிக் குளித்தோம். ஒரு மனிதனை, அவன் மனைவி  மற்றும் குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காத சமூக உணர்வில் மூழ்கடிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் எல்லோருமே அதிகாரம் பொருந்திய, வலிமையும் ஆண்மையழகும் மிக்கவராகப் புகழ்பெற்ற எங்கள் அப்பாவின் உடைமைகளின் ஒரு பகுதியாகவே எல்லோராலும் கருதப்பட்டோம்.
நான் அப்பாவின் அருகில் சென்றேன். ‘’ வித்தியாசமாக, எதையாவது பார்த்தீர்களா, அப்பா? புருவத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?’’
‘’ஆமாம், பார்த்தேன், உன் அம்மாவின் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அவளது சுகக்கேடுதான்  உடல் தோற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.’’
அம்மாவுக்கு மூளையில் இரத்தக் கசிவு என்று மருத்துவர் சொன்னார். உறுதியாக அதுதானா, அப்பா? நிறையப் பேர் இரத்தக்கசிவினால் சாகிறார்கள், ஆனால், அதனாலேயே நோயாளியின் தோற்றத் தன்மைகள் மாறுவதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.’’
‘’யாருக்குத் தெரியும்? உன் அம்மா வித்தியாசமானவள் … சாவில் கூட இப்படியொரு சிரிப்பு, சிரிக்கிறாள்.’’
‘’எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அம்மாவின் மரணம் பொருத்தமானதாக, துயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மரணம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறதென்றுகூடச் சொல்லலாம். அவளது சிரிப்பைப் பாருங்கள். இப்படி ஒரு அழகான சிரிப்பினை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? திரைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.’’
‘’என்ன பேசுகிறாய்? அதுவுமில்லால் உனக்கு என்னதான் தெரியும்? மூக்கு வடிக்கிற குழந்தை, நீ!’’
‘’நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவுக்கு இது ஒரு நல்ல சாவு – எல்லோரும் சொல்வார்களே ஹூஸ்னுல் காத்திமா, அது.’’
‘’உஷ்! போய் ஏதாவது வேலையைப் பாரு; சித்திக்கு உதவி செய்! போ, போ!’’
‘’நான் அம்மா கூடத்தான் இருக்கப் போகிறேன். அவளோடு கூட இருக்கப்போகிற கடைசி வாய்ப்பு, இது. அவளுக்காக, நான் பிரார்த்தனை செய்ய வேண்டும், அப்பா.’’
நோயர் ஊர்தி வந்த போது, எல்லோருமே இன்னும் பரபரப்பானோம்; ஆனால், நான், அம்மாவிடமிருந்து யாரும், என்னைப் பிரிக்க, என் அப்பாவாக இருந்தாலும் கூட,  அனுமதிக்கப்போவதில்லை.
‘’நீ ஒரு பெண்; உனக்குப் போதிய பலம் கிடையாது; ஆம்புலன்சில் நான் கூடப் போகிறேன்.’’ என்றார், என் அண்ணன்.
‘’ நல்ல திடமாகத்தான் இருக்கிறேன்,’’ நான் வலியுறுத்தினேன். ‘’அம்மா மருத்துவ மனையிலிருந்த காலமெல்லாம், நான் தான் அவள் பக்கத்திலேயே காத்துக் கிடந்தேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அம்மாவின் நெருக்கத்திலிருப்பதுதான் எனக்கு நிம்மதி.’’
‘’உன் ஒப்பாரியையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.’’
அழத்தேவையில்லாத காரணங்களுக்கு, ஆண்களும் கூடத்தான் அழுகிறார்கள். அம்மாவின் இறப்புக்காக நான் அழ மாட்டேன். அவள் அவரின் மாளிகைக்குப் போய்ச்சேரும்வரையில் அவளுடனேயே இருந்து, அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருப்பேன்.
‘’யாருடைய மாளிகை?’’ வாயை மூடிக்கொண்டிருந்த என் அண்ணன் கேட்டார்.
‘’நல்லது, நிச்சயமாக, அது, நீங்கள் நினைக்கும் இடமல்ல!’’
‘’நீயும் உன் முட்டாள்தனமும்!’’ என முணுமுணுத்தவாறே அகன்று சென்றார்.
‘’என் முட்டாள்தனம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும், அதைவிடவும் முட்டாள்தனமானவன் நீ’’ சிரிப்பினை அடக்கிக்கொண்டு, எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.
முடிவில், நானும் எனது சித்தியும் தான், நோயர் ஊர்தியில் அம்மாவுடன் சென்றோம். அப்போது இரவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலை எளிதாக, வசதியாக இருந்தது; யோக்யகார்ட்டாவிலிருந்து ஜோம்பங் சென்று சேர ஐந்து மணி நேரமே ஆனது. பயணத்தின் போது சித்தி, இருக்கையிலேயே தூங்கிவிட்டாள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில், நான் பிரார்த்தனை செய்தேன்.
ஒரு கட்டத்தில், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, நடு இரவு பன்னிரண்டு தாண்டி அதிகாலை முப்பது நிமிடமாகியிருந்தது.
‘’ஆமாம்! இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அதிகாலை பன்னிரண்டு முப்பதுக்குத்(00.30)தான், நான் வீட்டிலிருந்தும் வெளியே வந்தேன்,’’ என்றாள், அம்மா. ‘’அன்று இரவில் மசூதியின் வாசலை மிதிக்கும் தீராத பேராவலினை உணர்ந்தேன். என் இதயம் முழுவதுமாக ரோஜாக்கள் நிறைந்து, என் முகம் எதுவும் அறியாத்தன்மையில் ஒளிவீசியது. அவர் மிஹ்ரபில், நான் மெக்காவின் திசை நோக்கித் தொழுகின்ற இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல, விரைந்து செல்ல முயற்சித்தேன். என்னுடைய தாமதத்தை நினைத்து, என்னையே நொந்துகொண்டு, நான் மசூதியின் மாடிப்படிகளில் ஏறினேன். தொழுகையின் போது, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையில் தலையால் அடிபணிந்து வணங்கினேன். ஒன்றின் பின் ஒன்றாக, ஒவ்வொரு முறையும் என் நெற்றி அவரது பார்வையில் தரையைத் தொட்டு வணங்கியது. அப்படியாக எவ்வளவு நேரம் என்னை அர்ப்பணித்திருந்தேனென்று என்னால் சொல்ல இயலாது, ஆனால், அவரோடு செலவழிக்கின்ற நேரத்தை ஒருவர் எத்தனை மணி நேரமெனக் கணக்கிட்டு  எண்ணுவதில்லை. ஆனால், நான், அதன் பின்னர், எனது புதிய வீட்டிற்குத் திரும்பி, முன்வாசலில் என் காலை வைத்தேனோ இல்லையோ, அடிவயிற்றில் விழுந்த உதையில் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுபோயிற்று – அதுவே முதல் அடி, அதைத் தொடர்ந்து, தீவிரமாக வளர்ந்த வெறுப்பில் கனத்த எத்தனையோ அடிகள்.’’
என் முகம் தொங்கிப்போயிற்று. அம்மாவின் தலைவிதிப் புத்தகத்திலுள்ள அனைத்துப் புனிதங்களையும் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தேன், ஆனால், என் கண்கள் பனித்து என் அம்மாவின் இரகசியத் தொகுப்புகளின் முழுமை அனைத்துக்குள்ளும் என் பார்வையைச் செலுத்தும் நிலையில் நான் இல்லையென்பதும் தெளிவாகவே புரிந்தது. அம்மா, மிக நெருக்கமானவள், ஆனால், அதே நேரத்தில் மிகத் தொலைவானவளுமாக…….. அவளுடைய இரகசியக் காயத்தை, அதன் வலியை, எல்லோருக்கும் நன்கு தெரிந்த அவளது பொறுமையாலும், எக்கணமும் பொழிகிற வற்றாத அன்பாலும், எவ்வளவு சுத்தமாக மறைத்திருக்கிறாள்!
‘’ உதைப்பதற்கு வசதியாகக் காலை மாற்றிக்கொண்ட உன் அப்பா, ‘’ஏய், நீ மட்டும்தான் உண்மையான முஸ்லிமென்று நினைக்கிறாயா! நீ ஒருத்திதான் விசுவாசமுள்ள ஒரே ஆளென்று நினைக்கிறாயா! நல்லது, கேட்டுக்கொள்! இன்றையிலிருந்து, நான் உனது கணவன். வேறு எவரையும் விட, எனக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடைய உத்திரவுகளுக்குத் தான் கீழ்ப்படியவேண்டும், அதற்கும் மேலாக, வேறு எவருக்குமல்ல. உன்னுடைய விசுவாசம், நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அதுவும் எனக்கு மட்டுமேதான். புரிந்ததா?’’
‘’நான் மசூதிக்குப் புறப்படும்போது, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தீர்கள்….’’
‘’வாயை மூடு! ஒரு பொம்பளை, உன்னோடு நான் பேசத் தயாரில்லை!’’
‘’அதனால் நானும் வாயை மூடிக்கொண்டேன்,’’ அம்மா மிக எளிதாகச் சொன்னாள். ‘’அன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு என் வாயை மூடிக்கொண்டேன். பேசுகிற உரிமை உன் அப்பாவுக்கு மட்டும் தான் இருந்தது. மரணக் கூர்முனைக்கத்தியின் கீழான அச்சுறுத்தலில் உறைந்து, இறுக்கமாகி, மவுனமாகிப்போன ஒரு உலகத்தில், வாழ்க்கையின் கனவுகள் கண்ணெதிரே கடந்து செல்வதை, வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊமையாக, நான் இருந்தேன். நான், உன் அப்பாவின் பலிப்பொருள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும், ஒவ்வொரு நொடிக்குமான பொருள், ஒரு முன்மாதிரிப் பலியாக எப்படி இருக்கவேண்டுமென்பதான அவரது வார்த்தைகளைக் கேட்டு, மனப்பாடம் செய்வது - இணக்கமான ஒரு சிரித்த முகத்துடன் பலிபீடத்துக்குச் செல்வதுதான். இப்போது, நான் அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டேன். நான், உன் அப்பாவுடைய தியாகப் பலி; நான் அவருக்காகவே இறந்ததாக எல்லோரும் நினைக்கிறார்கள்.’’
‘’நான், திடீரென்று இப்படிச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், இதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூதியிலிருந்து திரும்பிவரும்போது – அவர் என்னை அடிக்கத் தொடங்குவதற்கு முன், என் முகத்திலிருந்ததும் ஒன்றுதானென உணர்ந்திருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளிலும், அவர் அந்தச் சிரிப்பை, நான் இப்போது என் இதழ்களில் அணிந்திருக்கிறேனே, இதே சிரிப்பினைத்தான் தேடினார்; ஒவ்வொரு இரவிலும், பகலிலும், அவர் அதைத் தேடித்தேடிப் பெரும் ஆசைகொண்டு, அதையே கனவாக்கிக்கொண்டார். ஆனால், அவர் கண்டதெல்லாம் வெறும் கானல்தான்; என் இதழ்கள் தாம் உறைந்த இரத்தத்தால் – அவரது முரட்டு விரல்கள் என் வாயைப்பற்றிக் கீறியதில் கசிந்த இரத்தம் – மூடிக்கிடந்தனவே.’’
அம்மா, மீண்டும் பேசத் தொடங்கும் முன், ஆழ்ந்து ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டார். ‘’இப்போது நேரம் என்ன, தெரியுமா? ஆம். இப்போது காலை பன்னிரண்டு முப்பது. புதுமணப் பெண்ணாக            அதைத் தொடர்ந்த முதல் மாதம் முழுவதும், எந்த அளவுக்கு முயன்றாலும், அடக்கமுடியாத, அவரது முன்னிலையில் அவரை அடிபணிந்து, வணங்கித் தொழுகை செய்கின்ற அந்தத் தணியாத பேராவலை உணர்ந்தேன். என்னுடைய ஆவல், எல்லைகள் அனைத்தையும் கடந்தது; என் பிரார்த்தனைகளுக்கும், என்னுடைய அடிபணிந்து, வணங்கல்களுக்குமான அவரது  புன்னகையே   அந்தத் தீராத பேராவலைப் பெருகச்செய்தது. எங்கள் புதுமண அறையின் ஒரு மூலையிலேயே, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையைத் தலையால் தொட்டு வணங்கி, நம்மைப் படைத்தவருடன் ஒன்றும் தீவிர எண்ணத்தின் இராகத்தில் என் மாலையின் மணிகளை உருட்டினேன்.
‘’ஒரு வேளை, நான், என்னை அறியாமலேயே சத்தமாகப் பெருமூச்சிட்டிருக்கலாம், ஆனால், அந்தப் பெருமூச்சு உன் அப்பாவின் செவிகளைத் துளைத்ததோடு, அவரது நரம்புகள், இதயம், மனம்……. எல்லாவற்றுக்குள்ளும் கொழுந்து விட்டெரிந்த பொறாமையின் தீநாக்குகளால் என் செவிகள் கருகிப்போயின. அப்புறம், அந்த அறையில் அத்தனை குரூரமாக, உறுதியாக, கனமாகத் தொங்கிக்கொண்டிருந்த முதலைத் தோல் கச்சினை நான் எப்படி மறக்க முடியும்! அவர் கச்சினை எடுத்து, உயர்த்தி என் முதுகில் பத்துப் பத்தாக இல்லை, நூற்றுக்கணக்கான முறைகள் விளாசினார். என் அமைதி அவருக்குள் இன்னும் முரட்டுத்தனமாக, பொறாமையின் தீ நாக்குகளை எழுப்பின. நான் மயங்கி விழுந்தேன்; காலைத் தொழுகைக்கான அழைப்பு என் காதுகளில் விழும்வரையில் என் நினைவு திரும்பவேயில்லை.’’
சிறிது நேரம் அம்மா எதுவுமே பேசவில்லை. அவளது கண்கள் தொலைதூரத்து வானத்தில் பதிந்திருக்க, சுவர்க்கத்தின் தேவதைக்கே பொருத்தமான அந்தச் சிரிப்பு அவள் இதழ்களில் மலர்ந்து, முகம் முழுவதும் பரந்தது.
‘’எனக்குத் தெரியும், அப்புறம் என்ன நடந்ததெனத் தெரிந்துகொள்ள விரும்புவாய்,’’ என்ற அம்மா, ‘’ எனக்குப் பைத்தியம் என்று உண்மையிலேயே உன் அப்பா நினைத்திருக்கலாம். ஏன் அப்படி? முடிவில்லாத வலியும் வேதனையும் எனக்குள் எழுந்தாலும், புதுமையான விஷயம் என்னவென்றால், அவர் மீதான என் தணியாப் பேராவல் இன்னும் தீவிரமானதுதான். அது என்னால், பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு நாடித் துடிப்புக்கும், அவரது முகம் என்னை நெருங்கிவந்துகொண்டேயிருந்தது.
அடிக்கடி நினைவுகள் தடுமாறி நான், எளிதில் குழப்பத்துக்காளானேன்.  சமைத்துக்கொண்டிருக்கும் போது, நான் பொரிக்கும் அத்தனை மீனும் வாணலியில் கரியாகப் போகிற அளவுக்குக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது, இரவில் ஏதோ கதவு தட்டிய சத்தம் கேட்டது போல, வீட்டின் முன்கதவைத் திறந்து பார்ப்பேன்; ஆனால் அங்கு, எதுவுமே இருக்காது. என் நடத்தையும் செயல்பாடுகளும், நான் சபிக்கப்பட்டவளென உன் அப்பாவை நம்பச்செய்துவிட்டன. ஆவிகள் தாம் என்னைப் பீடித்திருப்பதாக அவர் நினைத்தார்.’’
அம்மாவின் கையைத் தடவித் தட்டிக்கொடுக்கவேண்டுமென நான் நினைத்தேன்; ஆனால், தூக்கக்கலக்கம் என்னை வீழ்த்திவிட்டது.
‘’இப்படியாக இருக்க, அன்றைக்கு உன் அப்பா ஏதோ வியாபார விஷயம் அல்லது வேறு ஏதோ ஒன்றுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது காலை ஒன்பது மணி இருக்கும். அதனால், தொழுகைக்கான சுத்தப்படுத்தல் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவருடன் ஒன்றுவதான என் ஆவலை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.  என் தொழுகை மிகத் தீவிர ஈடுபாடாகி, நான் ஆழ்ந்த பணிவுடன் அடிபணிந்து, தலைவணங்கியிருந்ததில், உன் அப்பாவின் மகிழுந்து வந்த சப்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் உண்மையிலேயே அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முந்தைய எனது, கடைசித் தலைவணங்கல் அதுவாகவே அமைந்துவிட்டது. என் தலையில் விழுந்த அடியில் என்னுடைய திடமற்ற மண்டையோடு பளபளக்கும் கடினப் பீங்கான் தரை ஓடுகளில் மிகுந்த வேகமாக மோதியது; அது திடீரென ஒரு மின்னல் வெடித்தது போல அவ்வளவு கடினமாக இருந்தது; வெறிகொண்ட பார்வையைப் பிரதிபலித்த கண்களுடன் என் தலையைப் பின்னுக்கு இழுத்து என் குரல்வளையைப் பிடித்து இறுக்கிய உன் அப்பாவின் கைகள், நான் மூச்சற்றுத் தரையில் விழும்வரையில் விடவேயில்லை.’’
‘’அப்புறம் என்ன நடந்தது, அம்மா?’’
‘’திடீரென்று, எல்லாமே இருட்டாகிவிட்டது. எங்கும் ஒரே மைக்கறுப்பு! உலகம் முழுவதுமே அமைதியாகிவிட்டது. அதன் பின்னர், வெகுதூரத்தில் கண்ணைப்பறிக்கும் ஒரு  ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் தோன்றி, நிலைத்த ஒளிப்பாதை ஒன்றை வீசியது. அது – குழந்தையின் கனவில் தோன்றுவதைப் போல - என்னை வரவேற்க வந்துகொண்டிருந்த, ஏழு நிலவுகளின் பிரகாசத்தைக் கொண்ட ஒரு ஒளித்தேர். மந்திரவாதியின் அற்புதம் போன்ற, ஒரு கோடி கவிஞர்களால் கூட விவரிக்கமுடியாத பரவசத்தில்  நான் புன்னகைத்தேன். அவரது அரியணைக்கு என்னை இட்டுச் சென்ற தேர் பயணித்த தூரம் அநேகமாக மிகமிகக் குறைந்ததாகத்தான்  – எனது திருமண அறையிலிருந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு முன்புள்ள மசூதிக்குக் கடந்து சென்றேனே அதைவிட அதிக தூரமில்லாமல்தான் – தோன்றியது. அங்குதான், நான் பரிபூரண அன்பினைக் கண்டேன்; அதுவே, என் இதழ்களின் புன்னகையிலும் தெரிகிறது.
‘’உன் அப்பா, அவர் மீது பொறாமை கொள்ளலாமா?’’ அம்மா நயமாகக் கேட்டாள்.
நூறு தேவதைகள் ஒன்றுசேர்ந்து இழுக்க, நோயர் ஊர்தி பறந்துகொண்டேயிருந்தது, நீர் கோர்த்த வானத்தின் கீழான மேகமூட்டத்தில், நான் என் கண்ணீரைக் கழுவ முயற்சித்தேன். பின்னர், அன்பின் ரோஜாக்கள் என் இதயத்தில் பெருமிதத்துடன் இதழ்விரித்தன. என் அம்மா, அன்பின் பெருங்கடல், சுவர்க்கத்தின் மிக அருகில் – உங்கள் ஆன்மாவின் காலடிக்குச் சற்றே கீழாகக் காணப்படுகிறாள். நல்வணக்கம், சென்று வா, அம்மா. அன்பான கடவுளே! உங்கள் நேசக்கரத்தால் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.     
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தோனேசியா மற்றும் மலேயாவில் பெண்களும் தொழுகைக்காக, மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருபது ஆண்டுகளாக முதலைத் தோல் கச்சினால் அடிவாங்கி, கடைசியில் கணவனின் கையாலேயே மரணமடையும் குடும்ப வன்முறையினைப் படித்து முடித்த நேரத்தில்,  முகமது மீரானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முஸ்தபாக்கண்ணு, மனைவி மரியத்தை அடிப்பதற்காகவே, உத்தரத்தில் எப்போதும் வைத்திருந்த அந்தப் பிரம்பு நினைவுக்கு வந்து தொலைந்தது.   நல்லவேளையாக, வறுமையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்த புதுமைப்பித்தனின் செல்லம்மாளும் பிரமநாயகம் பிள்ளையும், அவர்களைத் தொடர்ந்து ஆலீஸ் மன்றோவின் கிராண்ட்டும் (மலை மேல் வந்தது, கரடி) ஆறுதலுக்கு வந்தனர்
ச.ஆறுமுகம். 9442944347 arumughompillai@gmail.com  
மலைகள் இணைய இதழ் டிசம்பர் 18, 2015ல் வெளியாகியுள்ளது.  
















Friday 22 January 2016

நைஜீரியச் சிறுகதை - நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத பாதை - A WAY YOU WILL NEVER BE - BY IKE OKONTA-


 நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத  பாதை  
A WAY YOU WILL NEVER BE 
BY IKE OKONTA
ஆங்கிலம் : ஐக் ஒகான்டா ( நைஜீரியா)
தமிழில் ச. ஆறுமுகம்


(ஐக் ஒகான்டா நைஜீரியாவில் பிறந்து, பட்டம் பெற்று பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர். நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர். 2005ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் புலத்தில் முனைவர் பட்டம் (D. Phil) பெற்று தற்போது அதே துறையிலேயே பணியாற்றுகிறார். இவரது Tindi in the Land of Dead என்ற சிறுகதை கெய்ன் விருதுக்கான சுருக்கப்பட்டியலில் இடம் பெற்றது.)    
அவன் உள்ளே வந்த கணத்திலேயே, மோசமாக ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவன் பையைச் சாய்மெத்தையின் மீது கழற்றிவைக்கட்டுமெனக் காத்திருந்து, பின் அவன் மார்பில் நழுவி விழுந்தாள். அவனது கரங்கள் அவளைத் தழுவிக் கொள்வதை உணர்ந்தாள். எப்போதும்போல் வலிமையாக, வெதுவெதுப்பாக, பாதுகாப்பாக. அவள் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திப் பிறகு   வழக்கமான துடிப்புக்குத் திரும்பியது. பின்னர், அவன் கரங்கள் தளர்ந்து அகல்வதை உணர்ந்து மீண்டும் அவள் இதயம் வேகமெடுத்தது.
அவள் காத்திருந்தாள். அவன் எதையுமே சொல்லவில்லை. நாற்காலி கிறீச்சிட்டது. அப்படித்தான் அவன் உட்கார்ந்தான். வாசல் வழியாக இசை. கனத்த முரசுகள் ஆழமாக அதிர்ந்து, எரிச்சலூட்டும் கரகரப்பான குரல். அவள் எங்கோ வெகுதூரத்தில் நினைத்தாள் : இந்த ஜோபாஸ் அவனது ஸ்டீரியோவை சத்தம் குறைத்துக் கேட்கக்கூடாதா? பின்னர், அவள் மனம் மவுனத்துக்குத் திரும்பியது. அந்த மவுனம் பெரிதாக, அந்த அறையின் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்து, அறையை மூழ்கடித்தது. அது அவளை மூச்சுத் திணறச் செய்தது. அதனை ஒரு பெரிய பலூனாக அவள் உணர்ந்தாள். அதனால், அவளே அதில் ஊசி குத்தினாள்.  
‘’ களைப்பாக இருக்கிறீர்கள்.’’
அவன் தலையாட்டினான்.
‘’ அலுவலகத்தில் கடினமான நாளாக இருந்திருக்கும்.’’
‘’ ஆமாம். மிகுந்த களைப்புதான்.’’ பின்னர், அவனது மந்த நிலையை அவனே உடைத்துவிட்டதாகத் தோன்றியது. அவன் புன்னகைக்க முயன்றான். அவனது குரலும்கூட மகிழ்ச்சியானது. ‘’நேற்றைய ஜின்னில் ஏதாவது மீதி இருக்குமா?’’
லாரா, அவள் நெஞ்சிலெழுந்த குறுகுறுப்பினை ஒரு புன்னகையுடன் மூடிமறைத்தாள். ‘’ அதுசரி, நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே, இப்போதுதான் சமையல் முடித்தேன். உங்களுக்குச் சாப்பாடு வேண்டாமா?’’
‘’என்ன சமையல்? எனக்குப் பிடித்ததா?
 ‘’ தினமும் இராத்திரிக்கு டோடோவும் பீன்சும் வேண்டுமா?’’ அவள் சிரிப்பு இப்போது வெளிப்பட்டது.
‘’ ஏன்? அப்படிச் செய்யக்கூடாதென்று நீதிமன்றத் தடையா  என்ன?
‘’ சரி. ஏதோ ஒன்று. இது உங்களுக்குப் பிடிக்குமென்று எனக்குத் தெரியும். முதலில் குளித்துவிடுகிறீர்களா?’’
‘’இல்லை. இப்போதே வேண்டும். பிடித்ததை ருசிபார்க்கக்  காத்திருப்பார்களா என்ன? அதெல்லாம் முடியாது.’’ அவன் அவள் கண்களை நோக்கியதும்  எந்தக் காரணமும் இல்லாமலேயே இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
அவள் குனிந்து, மேஜை நடுவில் கிடந்தவற்றை உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டு வைப்பதற்காக ஒதுக்கினாள். அவளது பின்கழுத்தின் அழகிய மென்மயிரைக் கண்டதும் அவனுக்குள் வெதுவெதுப்பான ஒளித்திரவம்  ஊற்றெடுத்தது. அவன் கை அதுவாகவே சென்று, அவள் கழுத்தை வருடியது. அவள் பாதி நிமிர்ந்து அவனது இதழ்களில் முத்தமிட்டாள்; அவன் கைகள் அவளைச் சுற்றித்தழுவி. இன்னும் அருகில் இழுத்தபோது நெளிந்து நழுவி, விடுவித்துக் கொண்டாள். ‘’ உங்களுக்குப் பசிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பசிக்கிறது.’’ சிரித்தாள்.
நசுக்கிய சேப்பங்கிழங்கு அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் புத்தம்புதிதாக, இருந்தது. பிட்டர்லீப் சூப்பில் கொதிக்கக் கொதிக்க ஆவி பறந்தது. அதிலிருந்து கிளம்பிய அருமையான மணம் அறை முழுதும் கமழ்ந்தது. அவர்கள் சாப்பிடத் தொடங்கியதும் மவுனம் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டது. இம்முறை இருவரும் அதை முழுவதுமாக உணர்ந்தேயிருந்தனர். மெதுமெதுவாக அது இருவருக்கும் நடுவேயான ஒரு கான்க்ரீட் சுவராக உயர்ந்து பிளவுபடுத்த, இருவரும் வேறெதுவும் செய்யமுடியாமல், சாப்பாட்டில் கவனம் செலுத்தினர்.
மவுனம் அந்த அறை முழுவதையும், அவர்களையும் கூடவே சேர்த்து விழுங்கி, அதன்  குகை போன்ற இரைப்பைக்குள் இழுத்துக்கொள்ளும் ஒரு அரக்க ஜந்துவாக  உருமாறிப் போனது. வெறுத்துப் போன, லாரா  ஏற்ற இறக்கங்கள் இல்லாத, பொருளுமற்ற பண்ணிசையான லோரக்கை, கையில் ஒரு கவளம் உணவை வைத்துக்கொண்டே முரலொலித்தாள்.
‘’ சாப்பிடவில்லையா?’’ அவன் கேட்டான்.
‘’ நீங்களுந்தான், ஏன், பசியில்லையா? அல்லது என் சமையல் பிடிக்கவில்லையா?’’
‘’அப்படியில்லையென்று உனக்குத் தெரியுந்தானே.’’
‘’அப்படியென்றால் எங்கே, என்ன தவறு? என் கணவர் தொங்கிப்போன முகத்தோடு வீட்டுக்கு வருவார். ஆனாலும் நான் கேள்வி எதுவும் கேட்கக்  கூடாது, அப்படித்தானே.’’ அவள் எழுந்து நின்றுவிட்டாள். அவள் குரலில் வழக்கத்துக்கு மாறான ஒரு தொனி புகுந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
அவன் மென்மையாகக் கூறினான். ‘’ உட்கார், லாரா. இப்போது சண்டை எதுவும் வேண்டாம்.’’ அவன் மேஜையைச் சிறிது தள்ளிவிட்டு, அவளது நாற்காலியை அவனை நோக்கி இழுத்தான். கைகளை நீட்டி அவளைச் சுற்றித் தழுவினான்; மேலும் நெருக்கி அணைத்தான். அவளுடைய மார்பின் கதகதப்பு அவனுக்குள் கசிந்து இறங்குவதாக உணர்ந்தான்.
‘’ இன்று பிற்பகலோடு என் வேலை போய்விட்டது, லாரா.’’
அவன் கைகளுக்குள்ளேயே, அவள் உடல் இறுகிப்போவதை அவன் உணர்ந்தான். அவள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. அவள் முகம் வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டது. பின்னர், அவளது தோள்கள் மெல்லக் குலுங்குவதை உணர்ந்து, அவள் அழத் தொடங்கிவிட்டாளென்பதைப் புரிந்துகொண்டான். அப்படியே அழட்டுமென்று விட்டுவிட்டான். அப்போதும் கைகளை அகற்றாமல், அவளை இறுக்கமாகத் தழுவியேயிருந்தான்.
லாரா நீண்ட நேரம் அழுதாள். பின்னர் அதிர்வுகள் குறைந்து, அவளது தோள்கள் குலுங்குவதை நிறுத்தின. முகத்தை அவன் பக்கமாகத் திருப்பினாள். அவள் கண்களில், கன்னத்தில் அப்போதுமிருந்த கண்ணீரை, அவன் குனிந்து, தன் இதழ்களால் ஒற்றித் துடைத்தகற்றினான்.
‘’ ஐயாம் சாரி.’’ என்றான், அவன். அவளோ மீண்டும் அழத் தொடங்கினாள்.
ஆனால், இம்முறை அவள் கண்ணீருடன் போராடிச் சிறிது நேரத்திலேயே அதைத் துடைத்துவிட்டு, வலிய புன்னகை ஒன்றை வரவழைத்துக் காட்டினாள்.
‘’ ஐயாம் சாரி,’’ என்றான், அவன், மீண்டும்.
‘’ அது எப்படி ஆனது?’’
‘’ பதிப்பாசிரியர் அவரது அலுவலகத்துக்கு அழைத்து, மேற்கொண்டு என் சேவை அவர்களுக்குத் தேவையில்லையென்றார்.’’
‘’ அப்படிச் சும்மா சொல்லிவிடமுடியுமா என்ன? என்னதான் நடந்தது?’’
அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். ‘’ நான் எழுதுவது   ஆளுநர் அலுவலகத்தில், ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லையென்று அவர் சொன்னார்.’’
அவளது கைகள் அவனைத் தழுவி இறுக்கின. ‘’ பாவம், என் கண்மணி.’’
அவன் வலிய ஒரு புன்னகையை வரவழைத்தான். அவன் தன் நினைவின்றியே  ‘’ வேறு ஏதாவது ஒரு வேலையைச் சீக்கிரமாகவே தேடிப் பிடித்துவிடுவேன். புதிய இதழ்கள், செய்தித் தாள்கள் எல்லாஇடத்திலும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன.’’ என்றான்.  அவன் அப்படிச் சொன்னாலும் அவன் கண்கள் அவளுடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தன. வேலை கிடைப்பது  அவ்வளவு எளிதானதல்லவென்று அவர்கள் இருவருக்கும் தெரிந்ததுதானே!.
லாரா எழுந்து, மேஜையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டினை எடுத்துவிட்டு, பூச்சாடி, இதழ்களையெல்லாம் மீண்டும் முன்பிருந்தவாறே வைத்தாள். அகலத்தட்டினைப் பின்வாசலுக்குச் சுத்தம் செய்வதற்காக எடுத்துச்சென்றாள். அவள் திரும்பி வந்தபோது, அவன் ஜின்னின் கடைசியைத் தம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தான். ஸ்டீரியோ மென்மையான காலிப்சோ பண்ணிசையில் பாடிக்கொண்டிருந்தது.
இசையோடு சேர்ந்து அவனும் தலையசைக்கத் தொடங்கினான். தம்ளரிலிருந்ததில் ஒரு வாய் குடிக்குமாறு அவளிடம் நீட்டினான். அவள் தலையசைத்து மறுத்தாள். அவனது ரசிக்கும் மனநிலையோடு இணைந்திட  முயன்று புன்னகைத்தாள். ஆனால், அது புன்னகையாகவே இல்லை.  வெறுமை துரத்த, படுக்கையறைக்கு ஓடினாள். சிறிது நேரம் கழித்து, அவள் திரும்பி வந்தபோது அவன் அங்கு இல்லை.  பாட்டு அப்போதும்  கேட்டுக்கொண்டுதானிருந்தது. ஆனால், அது வேறு ஏதோ ஒன்று, துயரமும் துக்கமுமாக இருந்தது         .
       ***
அவன் ஒருகணம் வீட்டின் முன்பாக நின்று தையல்காரர் சாகா அவரது நாய்க்கு இரவு உணவு ஊட்டுவதைக் கவனித்தான். சிகரெட்டுக்காகக் காற்சட்டைப் பைக்குள் துளாவினான். இருந்த ஒன்றும் கசங்கி நசுங்கிப்போயிருந்தது. முடிந்தவரை நேராக இழுத்து, உருட்டித் தடவிச் சரியாக்க  முயன்று, பின்னர் அதைப் பற்றவைத்தான். ஆழமாக இழுத்து, அதன் சிவப்பு முனை அரை இருளில் மினுங்குவதை, வண்ண வண்ண ஆடைகள் அணிந்த இளைஞர்கள், இளமங்கைகள் கோல் தெருவின் சிவப்பு விளக்குகளை நோக்கிச் செல்ல, அவனை விரைந்து கடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன்  கால்வாயைத் தாண்டிக் குறுக்காகக் கடந்து தெருவினுள் நடந்தான். அது ஒரு குளிரான இரவாக இருந்தது. அவன் சிகரெட்டை இன்னும் ஆழமாக இழுத்தான். அதன் புகை அவனுக்குள்  ஒரு உறைப்பான வெப்பப் பாதையை எரித்துச் செல்வதாக உணர்ந்தான்.
பலர் அவனைக் கடந்து சென்றார்கள். சிலர் இடித்துக்கூடச் சென்றார்கள். அவன் யாரையுமே கவனிக்கவில்லை. இருபக்கமும் இருளுக்குள் பதுங்கிக்கிடந்த சாம்பல் நிறமற்ற குடியிருப்புகளையும் கவனிக்கவில்லை. மம்மா இகோட் கொதிக்கவைக்கும் பானையின் முன் நெகிழித் தட்டும் கையுமாக அம்மணக் குழந்தைகள் கூடிநின்றனர். வெந்துகொண்டிருக்கும் பீன்சின் மணம் காற்றில் நிறைந்திருந்தது. கால்வாயில் மலம் கழித்துக்கொண்டிருந்த சின்ன  மகளை, மம்மா இகோட் திட்டிக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் நடந்துகொண்டேயிருந்தான். டேண்டி லிவிங்ஸ்டனின் ஒலிப்பதிவுக் கடை அமைதியாக இருந்தது. கடை அடைத்திருந்தது; ஆனால், சிவப்பு, ஊதா  நியான் விளக்குகள் அணைவதும் எரிவதுமாகக் கண்சிமிட்டின. டேண்டி லிவிங்ஸ்டன் எங்கே போயிருப்பானென அவன் வியந்தான். அங்கே எப்போதும் கூட்டமாய்க் கூடி, மைக்கேல் ஜாக்சன் ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டே அமெரிக்காவைப் பற்றிக் கனவுகண்டுகொண்டிருக்கும் இளைஞர்களுந்தாம்!
பப்பா அருந்தகத்துக்குத் திரும்பவிருக்கும்போது, ஒலிப்பதிவுக் கடை மூலையில் கிடந்த குப்பை மேட்டில் ஏதோ ஒன்று  திடீரென்று அசைவதைக் கண்டான். அது ஒரு நாயாக இருக்குமென்றுதான் அவன் நினைத்தான். அது மீண்டும் அசைந்தபோது அது ஒரு மனிதனெனக் கண்டான். அசைவில் ஏதோ ஒரு திருட்டுத்தனம் தெரிந்தது. அவன் நின்று கவனிக்கத் தொடங்கினான். அந்த மனிதன் ஒரு குச்சியால் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தான். பின்னர்,  குச்சியைக் கீழே போட்டுவிட்டு பூமிக்குள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்  கனமான ஏதோ ஒன்றைப் பிடித்து இழுப்பதுபோல இழுத்தான். அது திடீரெனக் கையோடு வந்துவிடவே அவன் தடுமாறிப் பின்பக்கமாகச் சாய்ந்தான். சமாளித்து நின்றபோது மெல்லத்திட்டுவது அவன் காதில் கேட்டது. அதிலிருந்து பிய்த்துப் பிய்த்துக் கழுத்தில் தொங்கிய  நெகிழிப்பைக்குள் போட்டுக்கொண்டிருந்தான்.
வியப்பாகத் தோன்றவே, அவன் அருகில் சென்றான். வேலையில் கவனமாக இருந்த அந்த மனிதன், அவனைக் கவனிக்கவேயில்லை. அவனுடைய அரணக் காலணி ஏதோ ஒரு காலி டப்பாவில் மோத, அது கால்வாயில் போய் விழுந்தது. அப்படியே சுழன்று திரும்பிய அந்த மனிதன் ஒரு நொடி உறைந்து நின்றான். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மேலும் நெருங்க, அடியெடுத்தபோது, கத்திக் கீச்சிட்ட அந்த மனிதன்,  முதுகில் நெகிழிப்பை பைத்தியம் பிடித்தது போல் அடித்துக்கொள்ள இருளுக்குள் ஓடிப்போனான்.
அவன் குப்பை மேட்டை நோக்கி நடக்க, கெட்ட நாற்றம்  மூக்கைத் துளைத்தது. பின்னர், அவன் அந்தப் பிணத்தை, பிய்த்து, மீந்துபோன, அழுகும் தசையைக் கண்டான். பாவம், அது ஒரு நாய். அவன் அந்த நாற்றத்திலிருந்தும் வெறி பிடித்த மாதிரியில் ஓடத் தொடங்கினான்.
பப்பா அருந்தகத்தின் முன்னர், மல்லம் கடையில்தான் நின்றான். இரண்டு சிகரெட்டு வாங்கினான். கறுப்பு நிறத்திலான வளர்ந்த பெண் ஒருத்தி, ஒரு மனிதனுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசுவதை நிறுத்திவிட்டு அவனை வெறித்து நோக்கினாள். அவன் ஒரு சிகரெட்டை சட்டைப் பையில் போட்டுவிட்டு இன்னொன்றைப் பற்றவைத்தான். அந்தப் பெண் அப்போதும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் வளமான இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தன. அவளிடமிருந்து சுவை மென்கோந்து வாசனையோடு மலிவான முகப்பூச்சு மணமும் வந்தது. அந்த மனிதன் சில்லறையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவளின் பார்வை அவன் முதுகில் துளைப்பதை உணர்ந்தவாறே அகன்றான். அந்த நேரத்தில் லாரா என்ன செய்துகொண்டிருப்பாளென நினைத்துப் பார்த்தான். அப்போதும் அழுதுகொண்டிருப்பாளென அவன் நினைக்கவில்லை. ஒருவேளை, அவளுடைய நாட்குறிப்பை மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கலாம். பொழுதன்றைக்கும் எதைப்பற்றித்தான் எழுதுவாளோவென நினைத்து வியந்தான்.  அதில் அவன் இருப்பானென அவனுக்குத் தெரியும். ஒபா, ஜாஜா, ஜே.ஐயுங் கூடத்தான். ஆனால், அவளின் நாட்குறிப்பை அவன் ஒருநாள்கூட வாசித்ததில்லை. அவன் அப்படியான ஒரு வாக்குறுதி அளிக்குமாறு  செய்துவிட்டாள்.
லாராவை நினைத்துக்கொண்டே, அவன் திரும்பி, வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அந்த இரவுநேரத்தெருவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். லிட்டில் பாஸ்சாவின் தெருக்களிலேயே அந்தத்தெருவில் மட்டுந்தான் தெருவிளக்குகள் அப்போதும் ஒளிர்கின்றன. புல்டோசர்கள் வந்து கடைகளையும் வீடுகளையும் இடிக்கும் முன்பான யாலாத்தெருவின் விளக்குகள் அளவுக்குப் பிரகாசமாக இல்லையென்றாலும், சுவர்கள் பொரிந்து உதிர்ந்து கொண்டிருக்கும் சாம்பல் நிறக் குடியிருப்புகளையோ, சாக்கடை அசுத்தங்களையோ வெளிக்காட்டாமல் மென்மையாகத் தூயதாக இருந்தன.
வீட்டின் முற்றம் இருட்டாக இருந்தது. அவன் எழுதுமேஜை மேலிருந்த விளக்கை ஒளிரச்செய்து அலுவலகத்திலிருந்து கொண்டுவந்திருந்த இதழை வாசிக்கத் தொடங்கினான்.   என்ன  வாசிக்கிறோமென அவனுக்குப் பிடிபடவேயில்லை. வாசிப்பில் அவனால்  கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனம்  அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. இதழை முன்பிருந்த அடுக்கிலேயே வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். படுக்கையறைக்குள் நுழைந்தான். இருட்டாக இருந்தாலும், கட்டமைவாக ஒடுங்கிய லாராவின் தோற்றத்தை அவனால் காணமுடிந்தது. அவள் தூக்கத்திலில்லையென்று அவனுக்குத் தெரியும். இருட்டிலேயே ஆடைகளைக் களைந்துவிட்டு, அவள் அருகாகப்   படுக்கையிலேறிப் படுத்தான். 
சிறிது நேரத்துக்கு இருவருமே பேசிக்கொள்ளவில்லை. வெள்ளிக்கிழமை இரவின் சத்தங்கள் தெருவிலிருந்து வீட்டுக்குள்ளும் கசிந்தன. இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் குரைத்தன. பாப் மார்லி தீர்க்கதரிசித் தூதர்களைப் பாடிக் கனவுகளைக் கொன்றுகொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் ஒரு போதைக்குரலும் அவரோடு இணைந்து கேட்டது.   சிரிப்பொன்று திடீரென வெடித்தது.
லாரா திரும்பிப் படுப்பதைக் கண்ணால் காணாவிட்டாலும், அவன் உணர்ந்துகொண்டான். உடனேயே கைகளை நீட்டி, அவளைத் தன்னோடு இழுத்தான். அவளது கூந்தலின் மணம் அவன் நாசியில் நிறைந்தது. அவள் முகம் வியர்வையில் நனைந்து சிறிது ஈரமாக இருந்தது.
‘’உனக்கு வியர்க்கிறதே. மின்விசிறியைப் போடட்டுமா?
‘’ வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்திலேயே குளிரத் தொடங்கிவிடும்.’’
மவுனம் மீண்டுமாக அவர்களிடையே வளரத் தொடங்கியது. உணவெடுத்துச் செல்லும் பெட்டிக்குள் ஒரு எலி நடமாட்டம் இருப்பதாக அவன் நினைத்தான். பின்னர் அவளது இதழ்களை அவன் கன்னங்களில் உணர்ந்தான். அவளை இன்னும் சேர்த்தணைத்தான். சிறிது நேரம் அவர்கள் அப்படியே பாப் மார்லியின் பாடலை, அந்தக் குடிகார மனிதன் பகடிக்குரலில் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் துக்கத்தை ஒலிப்பதாக, ஏன், ஒப்பாரி பாடுவதாகக் கூட அவன் நினைத்தான்.
‘’ அது, அந்தக் கட்டுரை தான், இல்லையா?’’
ஆமாம், இராணுவ ஆளுநருக்கு அதைப் பிடிக்கவில்லை.’’
‘’ இருந்தாலும், நீங்கள் அதை எழுதினீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி. நீங்கள்தான் என் கதாநாயகன்.’’
‘’ அதை எழுதவேண்டுமென்று தோன்றியது. அவ்வளவுதான். அதைப்போன்ற ஏதாவதொன்றை மறுபடியும் எப்போதாவது என்னால் எழுதமுடியாதுதான்.’’
‘’ எனக்குப் புரிகிறது.’’
இன்னொரு வேலை எனக்குக் கிடைக்கும். அது முந்தையதைப் போல இருக்காது.’’
‘’ ஆமாம். எனக்கொன்றும் பயமில்லை. நீங்கள் இப்போதும் என்னைக் காதலிக்கிறீர்களா?’’
‘’ நான் அப்படித்தானென்று உனக்குத் தெரியுமே.’’
‘’ மிக அதிகமாக? முதன் முதலாக, ஆரம்பத்திலிருந்த மாதிரியே?
‘’ ஆமாம். ஆரம்பத்திலிருந்த மாதிரியே.’’
‘’ உண்மையில் அதுதான் விஷயமான ஒன்று.  நமது காதல். அது மிக அழகான ஒன்று, அப்படித்தானே, இல்லையா?
‘’ ஆமாம். மிகமிகச் சிறந்தது.’’
‘’ எனக்கொன்றும் பயமில்லை. உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும்வரை எப்படியாவது சமாளித்துவிடலாம் . நமக்கு நம்முடைய காதல் இருக்கிறது. அதை யாரும் அசைத்துவிட முடியாது. இராணுவ ஆளுநராலுங்கூட முடியாது. எனக்கு ஒரு முத்தம் தாங்களேன்.’’
அவன், அவளை முத்தமிட்டான்.
பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து மென்மையாக விடைபெற்றது. அவள், அவளது  படுக்கைப் பக்கமாக உருண்டு படுத்தாள்.
‘’ நல்லிரவு.’’
‘’நல்லிரவு கண்ணே.’’
சிறிது நேரத்திலேயே அவளது மூச்சு சாதாரணமானதாக  ஏறியிறங்கியது. அவன் அவளைப் பார்த்தான். தூக்கத்தில், அவள் முகம் இறுக்கம் தளர்ந்திருந்தது, அவள் இதழ்களில் ஒரு புன்னகை முகிழ்த்திருந்தது. அவன் திரும்பிப் படுத்தான்.  கொசு ஒன்றின் புலம்பல் அவன் காதினை விரைந்து கடந்தது. இடைவழியில் ஏதோ காலடிச் சப்தங்கள் கேட்டன. அதைத் தொடர்ந்து ஒரு தணிவான கிளுகிளுப்புச் சப்தத்தையும் கேட்டான். ஒரு கதவு அடித்துக்கொண்டது. அவன் கூரைத் தளத்தைப் பார்த்தான். அவனால் தூங்க முடியவில்லை. பாப் மார்லியின் மற்றொரு பாடலை, மூன்று சிறுபறவைகள்  அவரது வீட்டு வாசலில் பாடிக்கொண்டிருந்ததைப் பற்றிப் பாடுவாரே, அதை, அந்தப் போதை மனிதன் பாடிக்கொண்டிருந்தான். அவன் குரல் இப்போது மகிழ்ச்சியாக, இதயத்தின் பாரம் இறங்கிவிட்டதாக இருந்தது. அவன் பாடுவதைச் சிறிது நேரம் கவனித்த அவன், எந்தக் காரணமும் இல்லாமலேயே அந்த போதை மனிதனோடு இணைந்து அதே இராகத்தை உள்மூச்சில் மென்மையாக விசிலடித்து இசைக்கத் தொடங்கினான்                                         


Source :  http://www.african-writing.com/four/ikeokonta.htm