Thursday 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 2 Glimpses of Sangam Poetry -2


சங்க இலக்கியத் துளிகள் - 2  Glimpses of Sangam Poetry -2
வதுவைநாளினும் இனிமை
` ........................................... குன்ற நாடன்
குடிநன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன்; அன்பினன்` என நீ 
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை காண்இனி - காதல் அம் தோழிஇ -
......... .......... ....................................
.........................................................
தொல்இசை நிறீய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
- அஞ்சியத்தை மகள் நாகையார்.
அகநானூறு - 352 ஆம் பாடலில் 7 முதல் 17 ஆம் வரிகள்.
( தலைவன் நல்லவன் எனக்கூறித் தலைவியைத் தலைவனோடு இணைத்துவைத்த தோழி, திருமணத்துக்குப் பின் இல்லறம் நிகழ்த்தும் தலைவியைப் பார்த்துவரச் செல்கிறாள். அவளிடம் தலைவியின் கூற்று)
பொருள் : குன்ற நாடன், உயர்குடியில் பிறந்தவன்; தன்னுடன் பழகியோரைப் பிரியாதவன்; கெடுமொழி பேசாதவன்; அன்பு நிறைந்தவன் என்றெல்லாம் அவன் சிறப்புக்களைக் கூறி அவனை என்னுடன் இணைத்து வைத்தாய், அன்புத் தோழியே நீ மிகவும் நல்லவள்.
மிகச் சிறந்த தொல் இசைப் பாடகன் இனிய இசைத்தமிழ் நூலின் முறை மீறாமல் இசைத்த பண்ணைவிடவும் அவன் புதிதாகப் புனைந்த பாடல் திறத்தை விடவும் என் தலைவன் இ்ப்போது எனக்கு மணநாளினை விடப் பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.
படம் 1 - ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ` ராதையைக் கண்ணனுக்கு அறிமுகப்படுத்துதல்` Raja Ravi Verma`s painting ` RADHA INTRODUCED TO KANNAN.
படம்- 2 - ராஜாரவிவர்மாவின் `இனிய நினைவுகள்` ஓவியம்
Raja Ravi Varma`s `SWEET REMEMBRANCES`
எமக்கும் எம் மனைவி
வதுவைநாளினும் இனியள் தாமே.

No comments:

Post a Comment