Thursday 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 4 Glimpses of Sangam Poetry

சேம்பின் இலையும் யானைக்காதும் 

சேம்பின் இலையை யானைக்காதுக்கு உவமித்தது தமிழின் இலக்கியப் பாரம்பரியம். Caladium செடியினை Elephant Ear Plant என்று அழைப்பதுதான் வழக்கிலுள்ளதாம். படத்திலிருப்பது Caladium.
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ, கல்வரை மார்பர் -
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள்இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
(பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.)
- கிள்ளிமங்கலம் கிழார். குறுந்தொகை 76. குறிஞ்சித்திணை.
பொருள் :
குளிர்ந்த வாடைக்காற்று, மலைப்பக்கத்தில் உள்ள, சேம்பின் அசைதலை உடைய வளம்பொருந்திய இலையைப் பெரிய களிற்றின் செவியைப் போலத் தோன்றும்படி தடவி அசைக்கும். இத்தகைய மிக்க பனியையுடைய முன்பனிக்காலத்தில் நடுங்குவதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலை போன்ற மார்பினையுடைய தலைவன், காந்தள் வேலியாக வளர்ந்துள்ள, உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு என்னைப் பிரிந்து செல்வார் என்று கூறுகின்றனையோ?
பக்கம் 188 – சங்க இலக்கியம் குறுந்தொகை புத்தகம் – 1 NCBH, Chennai.

No comments:

Post a Comment